Showing posts with label ஆலயம் ஏன்?. Show all posts
Showing posts with label ஆலயம் ஏன்?. Show all posts

Friday, July 7, 2017

ஆலயம் ஏன்?

சுவாமி விவேகானந்தர்  ஒரு சமயம் ஆன்மீக சொற்ப்பொழிவு ஆற்றிக் கொண்டிருந்தார். ஒருவன் குறுக்கிட்டு, "ஆண்டவனை அடைய நாம் ஏன் ஆலயம் செல்ல வேண்டும் ? ஆலயமின்றி ஆண்டவனை அடைய முடியாதா? என்றான்.
.
கேட்ட கேள்விக்கு பதில் சொல்லும் முன், அவனிடம் கொஞ்சம் தண்ணீர் கிடைக்குமா ? என்று வினவினார் சுவாமி விவேகானந்தர்.

அவன் ஓடிப் போய் ஒரு செம்பு நிறையத் தண்ணீர் கொண்டு வந்தான். சுவாமி அவனைப் பார்த்து , “ நான் தண்ணீர்தானே கேட்டேன்.எதற்கு இந்த செம்பு? செம்பு இல்லாமல் தண்ணீர் கொண்டு வரமுடியாதா? என்று கேட்டார்.


குழம்பிப் போன அவன், “அது எப்படி முடியும்? என்றான். விவேகானந்தர் அவனிடம், “ஆம் சகோதரனே, தண்ணீரைக் கொண்டுவர செம்பு தேவைப் படுவது போல, ஆண்டவனை உணர்ந்து மகிழ, ஓர் இடம் வேண்டாமா? அதுதான் ஆலயம். ஆனாலும் செம்பே தண்ணீர் ஆகாது; ஆலயமே ஆண்டவனாகாது.” என்றார்.