Showing posts with label கிருஷ்ணபட்சம் - சுக்லபட்சம். Show all posts
Showing posts with label கிருஷ்ணபட்சம் - சுக்லபட்சம். Show all posts

Friday, July 7, 2017

கிருஷ்ணபட்சம் - சுக்லபட்சம்

"கிருஷ்ண' என்றால் கருப்பு. இது இருளைக் குறிக்கும். "சுக்ல' என்றால் வெண்மை. ஒளியைக் குறிக்கும். "பட்சம்' என்றால் பதினைந்து நாட்கள். அமாவாசையின் மறுநாள் துவங்கி பிறைநிலா கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து ஒளிவீசும். பவுர்ணமியன்று முழுநிலவாக பிரகாசிக்கும். இரவில் வெண்மையாக ஒளிவீசும் வளர்பிறை நாட்களுக்கு "சுக்லபட்சம்' என்று பெயர். பவுர்ணமியின் மறுநாள் தேய்பிறை தொடங்கி இரவில் இருள் சூழ்ந்து வருவதால் அமாவாசை வரையிலான பதினைந்து நாட்களுக்கு "கிருஷ்ணபட்சம்' என்று பெயர்.

திதிகளில் வளர்பிறை துவிதியை, திருதியை, பஞ்சமி, சப்தமி, தசமி, ஏகாதசி, துவாதசி, திரயோதசி ஆகியவை விசேஷமானவை. தேய்பிறையில் துவிதியை, திருதியை, பஞ்சமி மூன்றும் சிறப்பான சுப திதிகள் ஆகும்.  இரு பதினைந்து, அதாவது ஒரு மாத காலத்தில், சுப காரியங்களில் ஈடுபட  இந்த திதிகள் உகந்தவையாகக் கருதப் படுகிறது