காலை 4.30 மணி முதல் 6 மணிக்குள்ளான
வேளைக்கு பிரம்ம முகூர்த்தம் என்று பெயர். இரவில் உறங்கும் உயிர்கள் மீண்டும்
எழுந்திருப்பதே சற்றேறக் குறைய மறு பிறவி தானே! எனவே, ஒவ்வொரு நாளும் காலையில்
மறு பிறவி பெறுவதை "சிருஷ்டி' (படைத்தல்) என்று சொல்லலாம். இத்தொழிலைச் செய்பவர்
பிரம்மா. எனவே இவரது பெயரால், விடியற்காலைப் பொழுதை "பிரம்ம முகூர்த்தம்' என்று
வைத்துள்ளார்கள். பிரம்ம முகூர்த்த வேளைக்கு திதி, வார, நட்சத்திர, யோக
தோஷங்கள் கிடையாது. இது எப்போதுமே சுபவேளை தான். இந்நேரத்தில் எழுந்து குளித்து
இறைவழிபாட்டைச் செய்து நமது வேலைகளைச் செய்ய துவங்கினால் அன்று முழுவதும் வெற்றிதான்
No comments:
Post a Comment