Friday, July 7, 2017

உத்திராயணம் - தட்சிணாயணம்

சூரியன் வடக்கு நோக்கி பயணம் செய்யக்கூடிய காலம் உத்திராயண புண்ணிய காலம் எனப்படும். இக்காலங்களில் பிறப்பவர்கள் மட்டுமின்றி இறப்பவர்களும் (இயற்கை மரணம் ) புண்ணியம் செய்தவர்கள் எனப்படுகிறது. தெற்கு நோக்கி சூரியன் சஞ்சரிக்கும் காலம் தட்சிணாயணம் எனப்படுகிறது. உத்திராயணத்திற்கு இணையான சிறப்பு இக்காலத்தில் இல்லை.

தை மாதம் முதல் 6 மாதம் உத்திராயணம் - ஆனி மாதம் முடிய இருக்கும். உத்திராயண புண்ணிய காலங்களில் பிறந்தவர் நல்லதை நினைப்பான், நல்லதை செய்வான், நல்லதை உண்பான் என்றும் சொல்வார்கள்! சுபகாரியங்கள்  உத்திராயண காலத்தில், அதாவது தை முதல் ஆனி வரையிலான மாதங்களில் செய்வது உத்தமமானது என்று கருதப்படுகிறது. ஆடி மாதம் முதல் மார்கழி மாதம் வரை உள்ள ஆறு மாத காலம் தட்சிணாயணம் எனப் படுகிறது. 

No comments:

Post a Comment